Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிக்குண்டு வீச்சு! – பாளையங்கோட்டையில் பரபரப்பு!

Bomb
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (08:51 IST)
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிக்குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் சுரங்க பாதையில் திடீர் வெடிசத்தம் கேட்டதாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்து அப்பகுதியை பார்வையிட்ட போலீசார் அப்பகுதியில் நாட்டு வெடிக்குண்டு வீசப்பட்டதை கண்டறிந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் பயணிகள் யாரும் இல்லாததால் யாரும் காயம்படவில்லை. குண்டு வீசியவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கெடுபிடி செய்த ஹாங்காங்; ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!