Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறைந்த வில் ஸ்மித்: விசாரணையை முடுக்கி விட்ட ஆஸ்கர் நிர்வாகம்!

அறைந்த வில் ஸ்மித்: விசாரணையை முடுக்கி விட்ட ஆஸ்கர் நிர்வாகம்!
, செவ்வாய், 29 மார்ச் 2022 (11:04 IST)
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம்  விசாரணையை தொடங்கியுள்ளது. 

 
94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
 
அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம்  விசாரணையை தொடங்கியுள்ளது. 
 
முன்னதாக வில் ஸ்மித் செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்கர் நிர்வாகம் விசாரணையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்மித் மீது ஆஸ்கர் சட்ட விதி மற்றும் கலிபோர்னியா சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கா? இல்லையா?