Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கா? இல்லையா?

மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கா? இல்லையா?
, செவ்வாய், 29 மார்ச் 2022 (10:50 IST)
மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை வழங்கப்படுமா என அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் பதில். 

 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடையும். 
 
இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்த நாட்களே விடுமுறை வழங்கப்படுமென தெரிகிறது. இதனிடையே இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
 
கொரோனா கால கட்டத்தில் தாமதமாக தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. அது முடிந்த பிறகு பாட திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். எனவே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடியார் ஏரியாவுக்குள் கால் வைக்கும் சசிக்கலா! – அதிமுகவில் பரபரப்பு!