Publish Date: Mon, 19 Feb 2018 (12:09 IST)
Updated Date: Mon, 19 Feb 2018 (12:22 IST)
சிரியாவில் நடந்த திடீர் கார் வெடிகுண்டு தாக்குதலில் எதிர்பாராத விதமாக 5 பேர் பலியாகினர்.
குவாமிஷ்லி நகரில் கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். குர்தீஷ் தீவிரவாத அமைப்பினர் இந்த நிகழ்விற்கு பொறுப்பேற்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேஹ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.