Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தலில் வெற்றிபெற வேண்டி உளுந்தாண்டாரிடம் வேண்டிய விஜயகாந்த்

Advertiesment
vijayakanth
, செவ்வாய், 10 மே 2016 (13:28 IST)
தமிழக தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால்  கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேமுதிக தலைவரும், மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் தான் போட்டியிடும் உளுந்தூர் பேட்டையில் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


 

மக்கள் நல கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தார். தற்போது தனது தொகுதியில் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார். நேற்று உளுந்தூர் பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் தொடந்து 5 நாட்களுக்கு தனது தொகுதியில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தற்போது வந்துள்ள கருத்து கணிப்புகள் அனைத்திலும் தேமுதிகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றன.கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கும் முயற்சியில் விஜய்காந்த் தற்போது சூராவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டி விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் உளுந்தூர் பேட்டையில் உள்ள புகழ் பெற்ற கோயிலான உளுந்தாண்டார்கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுக்கு வந்த சோதனை: அதிமுகவுக்கு தாவிய மடத்துக்குளம் வேட்பாளர்