அண்மை காலமாக தமிழில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு அனைத்துப் படங்களிலும் அவர் இருக்கிறார். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் கதையின் நாயகனாகவும் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்தன.
ஆனாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் யோகி பாபு பெயர் இருந்தால் படம் விற்பனை ஆகும் என்ற ஒரு பெயரை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் அவரின் நகைச்சுவைகள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருப்பதாகவும் அவர் க்ளிஷே ஆகிவிட்டார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இயக்குனர் ஆகும் எண்ணம் இருக்கிறதா?” என்ற கேள்விக்கு “எனக்கு அந்த ஐடியா கிடையாது. நான் வசனம் எழுதுவேன். எழுத்தாளர் சங்கத்தில் 10 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன். அதனால் கதைகள் எழுதிக் கொடுக்க ஆவலாக உள்ளேன். நான் உதவி இயக்குனராக வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் ராம்பாலா சார் என்னை நடிகனாக்கி விட்டார்” எனக் கூறியுள்ளார்.