Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சினிமா மேடையில் விஜயகாந்த்… ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

மீண்டும் சினிமா மேடையில் விஜயகாந்த்… ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
, சனி, 19 ஆகஸ்ட் 2023 (08:51 IST)
கேப்டன் என்ற வார்த்தையை கேட்டாலே நினைவில் வருபவர் விஜயகாந்த். அவரது மகனான சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். விஜயகாந்தால் உதவி பெற்றவர்கள் யாருமே இப்போது அவரின் வாரிசுக்கு சினிமாவில் எந்த உதவியும் செய்யவில்லை.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்க உள்ளார்.  கடந்த சனிக்கிழமை இந்த படத்தின் பூஜை நடந்தது. அதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொண்டு டைட்டிலை வெளியிடுவார் என இப்போது சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் வில்லனாகக் கலக்க இருக்கும் சத்யராஜ்… எந்த படத்தில் தெரியுமா?