தக்லைப் திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யாததால் கமல்ஹாசனுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் 30 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக்லைப் திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியான நிலையில், இந்தப் படம் வசூலில் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவின்போது கன்னடம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கர்நாடகாவில் இந்தப் படம் வெளியாகவில்லை. ஒரு வாரம் கழித்து வெளியிடுவோம் என்று கமல்ஹாசன் நீதிமன்றத்தில் கூறிய நிலையில், இனிமேல் வெளியிட்டாலும் சுத்தமாக வசூல் செய்யாது என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தக்லைப் படத்தின் ரிசல்ட் மோசமாக இருப்பதால், டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் 30 கோடி ரூபாய் குறைவாகத்தான் தருவோம் என்றும், இல்லையென்றால் 28 நாட்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எட்டு வாரங்கள் கழித்துத்தான் வெளியிடுவோம் என்று கமல் ஏற்கனவே உறுதிமொழி கொடுத்துள்ளதால், அவருக்கு 30 கோடி ரூபாய் நஷ்டம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.