Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின்னல் வேகத்தில் முடிந்த செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு!

மின்னல் வேகத்தில் முடிந்த செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு!
, வியாழன், 18 மார்ச் 2021 (15:57 IST)
நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் கவுண்டமணி செந்திலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. கவுண்டமணியோடு இணைந்த நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள செந்தில் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இப்போது ஒரு சில படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த கதையில் சிறையில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பின் விடுதலை ஆகும் கதாபாத்திரத்தில் செந்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது. 

இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து நேற்று அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 45 நாட்களில் படத்தை விரைவாக முடித்துள்ளார் இயக்குனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க ரொம்ப கருணைமிக்கவர் ஷகீலா மம்மி… உருகிய மணிமேகலை!