Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவ முத்து!

vinoth
புதன், 5 மார்ச் 2025 (15:22 IST)
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும்  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார்.  இதற்கிடையில் சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கி வரும் அவர் அறிவுரை செய்யும் விதமாக பல பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.

அப்படி இன்று தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் “ஐயோ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் முன்பே தெரியவில்லையே! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒருபோதும் கலங்காதீர்கள். புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்! இந்த நொடிதான் பிறந்தது போல நினைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவாஜி வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய மனு தாக்கல்.. உயர்நீதிமன்றம் அனுமதி...!

’டிராகன்’ இயக்குனரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?

சூர்யா 45 படத்தின் அடுத்த அப்டேட்டைக் கொடுத்த ஆர் ஜே பாலாஜி!

ரசிகர்களின் கதறலுக்கு செவி கொடுத்தாரா AK?... அடுத்த படம் சிறுத்தை சிவாவுடன் இல்லையாம்!

அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா தனுஷ்?... திடீரென பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments