Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகுமார் இயக்கத்தில் மீண்டும் உருவாகிறதா குற்றப்பரம்பரை கதை!

சசிகுமார் இயக்கத்தில் மீண்டும் உருவாகிறதா குற்றப்பரம்பரை கதை!
, செவ்வாய், 30 நவம்பர் 2021 (17:23 IST)
குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை பல வருடங்களாக எடுக்கவேண்டும் என இயக்குனர் பாரதிராஜா முயற்சி செய்தார். சிவாஜி மற்றும் சரத்குமார் நடிப்பில் பூஜை நடைபெற்று போஸ்டரும் வெளியானது. ஆனால் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஒரு முறை முயன்றார். அப்போதும் அவரால் படமாக்க முடியவில்லை. இதேபோல இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை திரைப்படமாக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அது சம்மந்தமான கதையை திரைப்படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தொடங்குகிறதா சங்கமித்ரா திரைப்படம்?