Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி சொன்னதை நான் அப்போதே கேட்டிருக்க வேண்டும்… சசிகுமார் ஆதங்கம்!

ரஜினி சொன்னதை நான் அப்போதே கேட்டிருக்க வேண்டும்… சசிகுமார் ஆதங்கம்!
, திங்கள், 22 நவம்பர் 2021 (18:38 IST)
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

சசிகுமார் நடித்த ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் ‘ராஜவம்சம்’ திரைப்படம் பல வெளியீட்டு தேதிகள் ஒத்திவைப்புக்குப் பின்னர் இப்போது நவம்பர் 26 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார் சசிகுமார். அப்போது ‘பேட்ட படத்தில் நடிக்கும் போது ரஜினி சார் என்னிடம் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடி. ஆனால் படத்தைத் தயாரிக்காதே என்று கூறினார். ஆனால் அப்போது அதை நான் கேட்கவில்லை. இப்போது அதை புரிந்துகொண்டுள்ளேன். ஒரு தயாரிப்பாளராக அந்த கஷ்டம் எனக்குத் தெரியும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷங்கர் ராம்சரண் படத்தை மொத்தமாக கைப்பற்றிய ஜி ஸ்டுடியோஸ்… இவ்வளவு கோடியா?