Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐயோ கடவுளே… எனக்கே இது புதிதாக இருக்கிறது- VJS படம் குறித்து ராதிகா ஆப்தே பதில்!

Advertiesment
பூரி ஜெகன்னாத்

vinoth

, வெள்ளி, 30 மே 2025 (10:16 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத். அவரின் பல ஹிட் படங்கள் தமிழிலேயே ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. எம் குமரன் படமெல்லாம் அவர் இயக்கிய படத்தின் ரீமேக்தான். ஆனால் தற்போது அவர் ஒரு பின்னடைவில் உள்ளார்.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவான லைகா திரைப்படம் பேன் இந்தியா ரிலீஸாக வந்தது. ஆனால் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக அவரின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூனில் அவர் தொடங்கவுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தன்னுடைய படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த தகவலுக்கு பதிலளித்துள்ளார் ராதிகா ஆப்தே. அதில் “ஐயோ கடவுளே, இந்த செய்தி எனக்கே புதிதாக இருக்கிறது. அந்த படத்தில் நான் நடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் வரி விதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்.. அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!