தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அவர் நடிப்பில் சமீபத்தைய ரிலீஸாக சக்தி திருமகன் ரிலீஸானது. இந்த படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கினார். இந்த படம் திரையரங்கில் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீஸாகி விவாதங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கதைத் தன்னுடையது எனவும் அதைத் திருடிதான் சக்தி திருமகன் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று சபரி சுந்தர் என்பவர் முகநூலில் குற்றச்சாட்டை வைத்தார். இதையடுத்து அருண் பிரபு அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அதில் “மிகவும் தவறான கருத்து. பல வருட உழைப்பில் உருவாக்கப்பட்ட கதை சக்தி திருமகன் எனக் கூறியுள்ளார்.