Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருவழியாக நிறைவடைந்த விஷ்ணு விஷால் & ராம்குமார் இணையும் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங்!

Advertiesment
ராம்குமார்

vinoth

, புதன், 11 ஜூன் 2025 (12:20 IST)
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும் தற்போதுதான் முடிந்துள்ளது. பெரும்பாலானக் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 150 நாட்கள் இந்த படத்துக்காக படப்பிடிப்பு நடத்தியுள்ளார் இயக்குனர் ராம்குமார்.

அறிவியல் புனைகதையாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு ‘இரண்டு வானம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலுடன் மமிதா பைஜு மற்றும் முனீஸ் காந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 வருடங்களில் 3000 கோடி வசூல் செய்த படங்கள்… ராஷ்மிகாவைப் புகழ்ந்த நாகார்ஜுனா!