Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட இளைஞர்.. ரயில் நிலையத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!

Advertiesment
மாளவிகா மோகனன்

Siva

, ஞாயிறு, 15 ஜூன் 2025 (09:34 IST)
நடிகை மாளவிகா மோகனன், மும்பையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 
 
தனது கல்லூரி நாட்களில் நடந்த ஒரு விரும்பத்தகாத ரயில் பயண அனுபவத்தை அவர் சமீபத்தில் பகிர்ந்துகொண்ட வீடியோ வைரலான நிலையில், அதற்கு மும்பை காவல்துறை உடனடியாக பதிலளித்துள்ளது.
 
இரவு 9:30 மணியளவில், தனது இரு தோழிகளுடன் ரயிலில் பயணித்தபோது, ஒரு நிலையத்தில் ரயில் நின்றபோது, ஒரு நபர் ஜன்னல் அருகில் வந்து, "ஒரு முத்தம் தருவீர்களா?" என்று அநாகரிகமாக கேட்டதாகவும், நாங்கள் உறைந்துபோனோம் என்றும், நாங்கள்  மூன்று இளம் பெண்கள், முற்றிலும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தோம்," என்று மாளவிகா வேதனையுடன் கூறினார்.
 
இதுகுறித்து காவல்துறை விளக்கமளித்தபோது  "உங்கள் அனுபவத்தைப் பார்த்தோம், அது அதிர்ச்சியூட்டுவதையும் நீண்டகால தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்கிறோம். எந்த நேரத்திலும், நகரத்தின் எந்த பகுதியிலும், தயவுசெய்து எங்களை 112/100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். விரைவில் உங்களுக்கு உதவுவோம். புகார் அளிக்காமல் இருப்பது குற்றவாளிகளை தைரியப்படுத்தும்.
 
மேலும், "மும்பை எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பானது. அதை மேலும் மேம்படுத்த நாங்கள் அயராது உழைப்போம். புகார் அளித்ததும், குற்றவாளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தனிப்பட்ட சம்பவங்களை பொதுமைப்படுத்தாமல், விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் செல்வாக்கை பயன்படுத்துங்கள்," என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!