ஒரு இளம்பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் காற்று வாங்க சென்றபோது, அண்டை அடுக்குமாடி வீட்டிலிருந்து ஒருவர் தன்னை இடைவிடாது பார்த்து, பிறகு சுய இன்பம் செய்ததாக கூறிய சம்பவம் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். “முதலில் அந்த நபர் என்னை உற்று பார்ப்பதை சாதாரணமாகவே எடுத்துக்கொண்டேன். ஆனால் அவர் தொடர்ந்து பார்த்து, பிறகு முழுமையாக என்னை பார்த்து கொண்டே சுய இன்பம் செய்ய தொடங்கினார்,” என அவர் எழுதியுள்ளார்.
அதன்பின் அந்த நபரை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்ததாக கூறிய அவர் க அந்த நபரின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். “நான் சற்று அமைதியாக இருக்கவே மொட்டை மாடிக்கு சென்றேன். ஆனால் அந்த நபரின் செயல் என்னை பயமும் அதிர்ச்சியும் அடைய வைத்தது,” என அவர் கூறினார்.
குடும்பத்திடம் சொல்லவும், போலீசில் புகார் தர தயக்கம் இருந்தாலும், அந்த நபரின் முகவரி மற்றும் ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரெடிட் பயனாளர்கள் அவரை புகார் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். இப்போது புகார் அளிக்காவிட்டால், மற்ற பெண்கள் பாதிக்கப்படுவர்,” என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம், பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாட ஆபத்துகளையும், சமுதாயத்தின் பதில்களையும் சுட்டிக்காட்டுகிறது.