Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்வேன் – பாரதிராஜா பாராட்டு!

எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்வேன் – பாரதிராஜா பாராட்டு!

vinoth

, சனி, 24 ஆகஸ்ட் 2024 (12:43 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்துக்கு முன்பே இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா இயக்குனர்களும் சேர்ந்து ப்ரமோஷன் செய்தனர். நேற்று இரவுக் காட்சிகள் தமிழ்நாட்டின் பெருவாரியான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் வாழை படத்தை பாராட்டி பேசிவருகின்றனர். அந்த வரிசையில் இயக்குனர் பாரதிராஜா “சத்யஜித் ரே மற்றும் ஷ்யாம் பெனகல் போன்றவர்களின் படங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும். அதுமாதிரி எல்லாம் படமெடுக்க, தமிழனுக்கு தகுதி இல்லையா என நினைப்பேன். ஆனால் அவர்களை எல்லாம் விஞ்சும் அளவுக்கு என் நண்பன், என் மாரி செல்வராஜ் படம் எடுத்துள்ளான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்வேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியோடு கூட்டணி அமைக்கும் டைம் ட்ராவல் இயக்குனர்!