காந்தாரா படம் அடைந்த இமாலய வெற்றியை அடுத்து மூன்று ஆண்டுகள் உழைப்பில் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா 1 திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த் மற்றும் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
காந்தாரா கதைக்களம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் அரங்க அமைப்பு முதல் ஆக்ஷன் காட்சிகள் வரை அந்த காலகட்டத்தில் எப்படி இருக்குமோ அப்படி பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனர் என்ற பாராட்டு படத்துக்குக் கிடைத்துள்ளது. இதுவரை உலகளவில் இந்த படம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் காந்தாரா 1 படம் தற்போது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 31 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த வெர்ஷனில் படத்தின் நீளம் குறைக்கப்பட்டு 134 நிமிடம் ஓடுமளவுக்கு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில டப் வெர்ஷனில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையை காந்தாரா பெற்றுள்ளது.