சுமார் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட மொழியில் உருவானா காந்தாரா திரைப்படம் இந்திய அளவில் பேன் இந்தியா ஹிட் ஆகி 400 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்தது. அதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகம் காந்தாரா -1 ரிலீஸாகியுள்ளது.
காந்தாரா கதைக்களம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றி காரணமாக சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த பாகம் உருவாக்கப்பட்டு பேன் இந்தியா ரிலிஸாக நேற்று ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்பே இந்தியா முழுவதும் பல நகரங்களில் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டன.
முதல் நாளில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற காந்தாரா இந்தியளவில் சுமார் 60 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இந்த படத்தின் வசூல் சுமார் 45 கோடி ரூபாயாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.