Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாயகர்கள் மீண்டும் வருகிறார்கள்… ஆகஸ்ட்டில் கமல்& மணிரத்னம் பட ஷூட்டிங்!

நாயகர்கள் மீண்டும் வருகிறார்கள்…  ஆகஸ்ட்டில் கமல்& மணிரத்னம் பட ஷூட்டிங்!
, வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (09:19 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.

இதன்பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால், கமல்ஹாசனும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் முதல் படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் திரைக்கதைப் பணிகளை மணிரத்னம் முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக, கமல்ஹாசன் இந்தியன் 2 ஷூட்டிங்கை நிறைவு செய்வார் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதியால் தள்ளிபோகும் சிவகார்த்திகேயன் மாவீரன்… பின்னணி என்ன?