Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணதாசன் பாடல்களை எழுதவே மாட்டார் – கமல் சொன்ன ருசிகர தகவல்!

கண்ணதாசன் பாடல்களை எழுதவே மாட்டார் – கமல் சொன்ன ருசிகர தகவல்!
, சனி, 13 ஜூன் 2020 (07:59 IST)
நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் கலந்துகொண்ட இன்ஸ்டாகிராம் உரையாடலில் கண்ணதாசன்  பற்றி சில ருசிகரமான தகவல்களை கமல் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படமான தலைவன் இருக்கின்றான் படக்குழுவினருடன் தொடர் இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஏ ஆர் ரஹ்மானுடன் நேற்று மாலை ஐந்து மணிக்கு கலந்துரையாடலை நிகழ்த்தினார். அப்போது ஏ ஆர் ரஹ்மான் ‘ஒரு இசைக்கலைஞராக இருப்பதால் தனக்கு மொழி கைவரவில்லை. என்னால் உங்களை போல சரளமாகப் பேசமுடியாது. என்னால் வேகமாக பேசுவதை விட வேகமாக இசையைப் பற்றி நினைக்க முடியும்’ எனக் கூறினார்.

அப்போது கமல் ‘கண்ணதாசனும் அதுமாதிரிதான். அவர் என்றைக்குமே பாடல்களை எழுதியதில்லை. டியூனைக் கேட்டுவிட்டு அப்படியே பாடல் வரிகளை சொல்லிவிட்டு போய்விடுவார். ஏனென்றால் அவர் மூளை அந்த அளவுக்கு வேகமாக இயங்கும். அதைப் பேப்பரில் அவரால் பொறுமையாக எழுத முடியாது’ என பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்களை தீண்டதகாதவர்கள் போல நடத்தினார்கள் – பிரபல தொகுப்பாளினி புகார்!