சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி நடப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இன்று ஓர் எச்சரிக்கை அறிக்கையை விடுத்துள்ளது.
RKFI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
"எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை."
"நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக எந்த வழியில் செய்தி வந்தாலும், அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்."
அனுமதியின்றி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் RKFI எச்சரித்துள்ளது.
நடிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இதுபோன்ற போலியான அழைப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.