Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிப்பு அரக்கன்கள் ஃபஹத் &எஸ் ஜே சூர்யா நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதா?!

Advertiesment
சிம்பு

vinoth

, சனி, 14 ஜூன் 2025 (09:10 IST)
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்று அவரின் நடிப்பு பெரிதாக சிலாகிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழைத் தாண்டியும் அவருக்கு இப்போது வாய்ப்புகள் குவியத் தொடங்கின. மலையாளத்தில் அவர் நடிக்கும் முதல் படமாக பஹத் பாசில், இயக்குனர் விபின் தாஸ் கூட்டணியில் உருவாகும் படம் சொல்லப்பட்டது. இந்த படம் பற்றி எஸ் ஜே சூர்யாவும் தன்னுடைய நேர்காணல்களில் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் திடீரென இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் விபின் தாஸ் அடுத்து சந்தோஷ் ட்ராஃபி என்ற படத்தை இயக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லீக் ஆன பிரபாஸின் ‘தி ராஜா சாப் படக் காட்சிகள்’.. படக்குழு எச்சரிக்கை!