Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

Advertiesment
இயக்குனர் ராம்

vinoth

, சனி, 28 ஜூன் 2025 (15:01 IST)
பேரன்பு படத்துக்குப் பிறகு 6 ஆண்டுகளாக இயக்குனர் ராமின் எந்த படங்களும் ரிலீஸாகவில்லை. அவர் இயக்கிய ஏழு மலை ஏழு கடல் படம் நிதிப் பிரச்சனையால் ரிலீஸ் தாமதமாகியுள்ளது. ஏழு மலை ஏழு கடல் படத்துக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டது. ஜூலை 4 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வெற்றிமாறன் “இயக்குனர் ராம் தற்போது வரும் இளம் இயக்குனர்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளார். மிகவும் சுதந்திரமான சிந்தனைக் கொண்டவர். திரைக்கதையில் பின்பற்றப்படும் விதிகள் குறித்த கவலைகள் இல்லாமல் படம் பண்ணுபவர். இங்கு வந்திருக்கும் எல்லோரும் படம் பார்த்து விட்டார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் வகுப்பறையில் நிற்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்” எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!