Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தற்போது படத்தை எடுப்பதை விட விற்பது கடினமாகிவிட்டது- இயக்குனர் ராம் கவலை!

Advertiesment
இயக்குனர் ராம்

vinoth

, திங்கள், 30 ஜூன் 2025 (08:45 IST)
பேரன்பு படத்துக்குப் பிறகு 6 ஆண்டுகளாக இயக்குனர் ராமின் எந்த படங்களும் ரிலீஸாகவில்லை. அவர் இயக்கிய ஏழு மலை ஏழு கடல் படம் நிதிப் பிரச்சனையால் ரிலீஸ் தாமதமாகியுள்ளது. ஏழு மலை ஏழு கடல் படத்துக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டது. ஜூலை 4 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷனுக்காக இயக்குனர் ராம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து ஒரு நேர்காணலைக் கொடுத்துள்ளார்கள்,

அந்த நேர்காணலில் இயக்குனர் ராம் பேசும்போது “நான் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் ப்ரோமோ ஷூட் வீடியோவைப் பார்த்தேன். அதில் நிறைய டிஸ்க்ளைமர்கள் இடம்பெற்றுள்ளன. வெற்றிமாறனும் தற்போது இந்த ட்ரண்ட்டுக்கு வந்துவிட்டார்கள். இப்போது படத்தை சொல்வதை விட அதை விற்பது கடினமாக உள்ளது.” எனக் கூற அதை வெற்றிமாறனும் ஆமோதித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவை வைத்து படமெடுத்தால் எனக்கு ரூ.20 கோடி தர வேண்டும்: வெற்றிமாறனுக்கு தனுஷ் நிபந்தனை?