நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தில் 'வடசென்னை' படத்தின் சில கேரக்டர்களை இணைக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'வடசென்னை' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனுஷ், சிம்பு-வெற்றிமாறன் படத்தில் 'வடசென்னை' படத்தின் கேரக்டர்கள் பயன்படுத்தப்பட்டால் தனக்கு ரூ. 20 கோடி தர வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்புவும் வெற்றிமாறனும் மிகச் சிறந்த நண்பர்கள் என்பதும், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை', 'அசுரன்' ஆகிய படங்களில் நடித்த தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது சிம்புவை வைத்து எடுக்கும் படத்தில் தனது படத்தின் காட்சிகளையும், கேரக்டர்களையும் வெற்றிமாறன் பயன்படுத்துவதால் ரூ. 20 கோடி கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.