Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைலண்ட் ஆக நடந்து முடிந்த மிர்ச்சி சிவா & இயக்குனர் ராம் பட ஷூட்டிங்!

சைலண்ட் ஆக நடந்து முடிந்த மிர்ச்சி சிவா & இயக்குனர் ராம் பட ஷூட்டிங்!
, வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:36 IST)
இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்துக்கு ஏழுகடல் ஏழுமை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரிமியர் ஆகவுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது.

கோயம்புத்தூரில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறந்த படம் அயோத்தி… சிறந்த நடிகர் வடிவேலு- சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட விருதுகள்!