Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

Advertiesment
தனுஷ்

vinoth

, திங்கள், 16 ஜூன் 2025 (13:18 IST)
நடிகர் தனுஷின் நேரடி இரண்டாவது தெலுங்கு படமாக சேகர் கமுலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிக மந்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து ஜூன் 20 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

இதையடுத்து படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விளம்பரப் படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனுஷிடம் தொகுப்பாளர் உங்களுக்கு EMI இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த தனுஷ் “150 ரூபாய் சம்பாதித்தால் 200 ரூபாய்க்கு பிரச்சனை இருக்கும். அதுபோல ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தாலும் 2 கோடி ரூபாய்க்கு பிரச்சனை இருக்கும். பிரச்சனை இல்லாத இடமே இல்லை. நம்மிடம் காசு பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும். வேறு எதுவும் கிடைக்காது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!