Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷுக்கு வில்லன் ஆகும் அருண் விஜய்… பிரம்மாண்ட பட்ஜெட்டில் அடுத்த படம்!

தனுஷுக்கு வில்லன் ஆகும் அருண் விஜய்… பிரம்மாண்ட பட்ஜெட்டில் அடுத்த படம்!

vinoth

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (11:58 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து பல படங்களைக் கைவசம் வைத்துள்ள தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் நடக்க உள்ளதாகவும், தற்போது அதற்கான லொகேஷன் தேர்வுகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அசோக் செல்வன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைமாறும் முண்டாசுப்பட்டி ராம்குமார் & விஷ்ணு விஷால் படம்…!