Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகைகள் பற்றி ஆபாசப் பேச்சு… மருத்துவர் காந்தராஜ் மீது புகார் அளித்த ரோகினி!

நடிகைகள் பற்றி ஆபாசப் பேச்சு… மருத்துவர் காந்தராஜ் மீது புகார் அளித்த ரோகினி!

vinoth

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (11:36 IST)
மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தற்போதைய நிலையில் மிகவும் ஆரோக்யமாக செல்லும் மாநிலமாக கேரளா இருந்த நிலையில் இந்த புகார் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல பிரபலங்கள் மீது அடுக்கடுக்காகப் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இதே போன்ற கமிட்டியை மற்ற மொழி திரையுலகினுள்ளும் உருவாக்கப்பட வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த சர்ச்சை விவகாரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேசிய மருத்துவரும்,சில படங்களில் நடித்துள்ளவருமான காந்தராஜ் பெண் நடிகர்கள் குறித்து ஆபாசமாகப் பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதில் பல நடிகைகள் இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக்கொண்டு இப்போது காலம் போன காலத்தில் வந்து புகாரளிக்கிறார்கள் என்றெல்லாம் அவர் பேசியிருந்தார். இதற்கு வலுவானக் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது அவர் மீது நடிகர் சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி, காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னைக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்தார் 2 படத்தில் இருந்து வெளியேறுகிறாரா யுவன் ஷங்கர் ராஜா?