Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100ஐ விட 50 தான் சில சமயத்தில் சிறந்தது! – திரையரங்க அனுமதி குறித்து அரவிந்த் சாமி!

Advertiesment
Cinema
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:30 IST)
தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அரவிந்த்சாமி ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையிலும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற படங்கள் வெளியாவதால் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் பட வெளியீட்டுற்கு திரையரங்க உரிமையாளர்கள், ரசிகர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் அரவிந்த்சாமி “சில நேரங்களில் 50% சதவீதம் என்பது 100% என்பதை விட சிறந்ததாகவே இருக்கும். அவற்றில் இதுவும் ஒன்று” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது டைட்டில் வெல்லப்போவது ஷிவானியா? அப்படியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!