Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

vinoth
செவ்வாய், 3 ஜூன் 2025 (09:32 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

பாகுபலி படத்துக்குப் பிறகு அனுஷ்கா உடல் எடை அதிகமாகி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார். கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் ‘காத்தி’ திரைப்படம் ஜூலை 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கிரிஷ் இயக்கியுள்ளார்.  விக்ரம் பிரபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தங்க நிற உடையில் சிலை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ்… விஜயகாந்தைத் திரையில் பார்த்ததும் கண்ணீர் விட்ட பிரேமலதா!

கூலி படத்தில் என் வேலை அதுமட்டும்தான்… எனக்கு எந்த வருத்தமும் இல்லை –அமீர்கான்!

தீபாவளிக்கு ப்ரதீப்பின் இரண்டு படங்கள் ரிலீஸா? … LIK படத்துக்கு விட்டுக் கொடுக்காத ட்யூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments