ஐபிஎல் 2025 சீசன் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடந்த முதல் ஐபிஎல் குவாலிபையர் போட்டியில் பெங்களூரு அணி எளிதான வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி விரைவாக விக்கெட்களை இழந்து 102 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதை பெங்களூரு அணி பத்தே ஓவர்களில் விரட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக முஷீர் கான் இம்பேக்ட் வீரராகக் களமிறங்கினார். அப்போது களத்தில் ஃபீல்ட் செய்துகொண்டிருந்த விராட் கோலி அவரை வாட்டர் பாய் என சொல்லிக் கிண்டல் செய்ததாக சர்ச்சைக் கிளம்பியுள்ளது.
ஆனால் இம்பேக்ட் ப்ளேயராக இறங்குவதற்கும் சிறிது நேரம் முன்புதான் முஷீர் கான் வாட்டர் பாயாக மைதானத்துக்குள் வந்தார். அதைக் குறித்துதான் ஆச்சர்யமாக “இப்போதுதானே அவர் வாட்டர் பாயாக வந்தார்” என அணி வீரர்களிடம் ஆச்சர்யத்துடன் கோலி சொன்னதாக மற்றொரு தரப்பினர் பேசிவருகின்றனர்.