Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

Advertiesment
அனுஷ்கா

vinoth

, செவ்வாய், 3 ஜூன் 2025 (09:32 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

பாகுபலி படத்துக்குப் பிறகு அனுஷ்கா உடல் எடை அதிகமாகி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார். கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் ‘காத்தி’ திரைப்படம் ஜூலை 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கிரிஷ் இயக்கியுள்ளார்.  விக்ரம் பிரபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா… ஆதிக் போடும் ஸ்கெட்ச்!