தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். அஜித்தை வைத்து அதிகப் படங்கள் இயக்கிய இயக்குனர் என்றால் அது சரண்தான். இவர்கள் கூட்டணியில் காதல் மன்ன, அமர்க்களம், அட்டகாசம் மற்றும் அசல் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினார்கள்.
இதில் அசல் தவிர மற்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. அசல் படம் படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்து விரைவில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் சரணுக்குக் கால்ஷீட் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? அல்லது அவர் இயக்கத்தில் நடிக்க உள்ளாரா என்பது குறித்தத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. 90 கள் மற்றும் 2000 களின் தொடக்கத்தில் தொடர்ந்து கமர்ஷியல் வெற்றிகளைக் கொடுத்த சரண் ஒரு கட்டத்துக்கு மேல் தோல்விப் படங்களாகக் கொடுத்து மார்க்கெட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.