Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் புதிதாக வீடு கட்டும் சூர்யா- ஜோதிகா தம்பதியினர்!

Advertiesment
ஜோதிகா

vinoth

, திங்கள், 30 ஜூன் 2025 (14:10 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் மற்றும் டப்பா கார்டல் ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆனார்கள். இதற்குக் காரணம் சிவகுமாருக்கும் ஜோதிகாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஜோதிகா தரப்போ, தங்கள் பெற்றோரோடு சேர்ந்து இருப்பதற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மும்பையில் தற்காலிகமாகக் குடியேறியதாகவும் சொல்லப்பட்டது.

அதன் பிறகு ஜோதிகா சென்னைக்கு வந்தாலும் அவர் சூர்யா வீட்டில் தங்காமல் ஹோட்டல்களில்தான் தங்குகிறார் என்று கிசுகிசுக்கள் பரவின. இந்நிலையில் இப்போது சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சூர்யா புதிதாக வீடு கட்ட உள்ளதாக சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை டிமாண்டி சாலைக்கு MSV பெயர்.. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!