பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு இருப்பது போன்ற வெறித்தனமான ரசிகர்கள் இந்தி சினிமாவில் சல்மான் கானுக்கு உண்டு. அதனால்தான் அவர் மேல் பல சர்ச்சைகள், வழக்குகள் இருந்தும் இன்றளவும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
சமீபகாலமாக சல்மான் கானின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றனர். அதனால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனக்கு அரிய வகை மூளை நோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில் “மூளையின் ரத்த நாளத்தில் எனக்கு அரிய வகை நோய் இருக்கிறது. ஏவிஎம் நரம்பு மண்டலத்திலும் பிரச்சனை உள்ளது. அதனுடன் நான் போராடி வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.