Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவறான நபர்களை நம்பி ஏமாறவேண்டாம் – ‘மாநாடு’ படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எச்சரிக்கை!

Advertiesment
பாலா

vinoth

, செவ்வாய், 24 ஜூன் 2025 (09:29 IST)
தொடர்ந்து மாநாடு, வணங்கான், ஏழு கடல் ஏழு மலை என கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து தயாரித்து வருபவர் சுரேஷ் காமாட்சி. அவர் தற்போது தன்னுடைய ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் வேலைகளில் உள்ளார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம்  ஈர்த்துள்ளது. அதில் “எமது நிறுவனத் தயாரிப்பில் எந்த படத்துக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறவில்லை. வளரும் நடிகர்கள் தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்படுங்கள். தவறான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எச்சரித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதைப் பொருள் வழக்கு… ஜாமீன் கேட்டு ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல்?