Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா ரஞ்சித்தோடு இருப்பதால் என்னை ஒதுக்குகிறார்கள்… சினிமாவில் சாதி குறித்து கலையரசன் ஆதங்கம்!

Advertiesment
ஷேன் நிகம்

vinoth

, வியாழன், 10 ஜூலை 2025 (13:31 IST)
தமிழ் சினிமாவில் முகமூடி படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கலையரசன். ஆனால் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த மெட்ராஸ் படம். அந்த படத்தில் அவர் நடித்த அன்பு கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

அதன் பின்னர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திரம் என்று பலவிதமான கதாபாத்திரங்களில் கலந்துகட்டி நடித்து வருகிறார். ஆனால் அவரால் கதாநாயகனாக ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்க முடியவில்லை.

இந்நிலையில் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் சாதிய ஒதுக்குதல் குறித்து பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அதில் “தமிழ் சினிமாவில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் பாகுபாடு மோசமாக உள்ளது. நான் இயக்குனர் பா ரஞ்சித்துடன் நெருக்கமாக இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இயக்குனர்கள் என்னை நடிக்க அழைக்க யோசிக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் நடிக்க வந்த ஸ்மிருதி இரானியின் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் திரையுலகினர்..!