Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான காந்தாரா படத்தின் போர்க்களக் காட்சி..!

Advertiesment
500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான காந்தாரா  படத்தின் போர்க்களக் காட்சி..!

vinoth

, வியாழன், 6 பிப்ரவரி 2025 (08:53 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள். படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார்.

இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது பிரம்மாண்டமான ஒரு போர்க்கள சண்டைக் காட்சியைப் படமாக்கி வருகின்றனர். இதில் 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்படி இருக்கிறது சித்தார்த் & சரத்குமார் காம்போவின் ‘3BHK’ டீசர்?