Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும்.. ரன்பீர் கொடுத்த அப்டேட்!

Advertiesment
அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும்.. ரன்பீர் கொடுத்த அப்டேட்!

vinoth

, செவ்வாய், 10 டிசம்பர் 2024 (13:33 IST)
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் விடப்பட்டிருந்தது. அதன்படி இரண்டாம் பாகத்தில் கதாநாயகன் மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் ரன்பீர் கபூரே நடிக்கவுள்ளார். இந்நிலையில் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்பது குறித்து ரன்பீர் கபூர் அப்டேட் கொடுத்துள்ளார்.

சந்தீப் அடுத்து பிரபாஸை வைத்து ஸ்பிரிட் என்ற படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை முடித்ததும் அனிமல் படத்தின் இரண்டாம் பாகமான ‘அனிமல் பார்க்’ படத்தை இயக்கவுள்ளதாக ரன்பிர் கபூர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோல்டன் க்ளோப் விருதுக்கு தேர்வான மலையாளப் படம்!