Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாப்வேக்கு தடை விதித்தது ஐசிசி – வீரர்கள் புலம்பல் !

Webdunia
சனி, 20 ஜூலை 2019 (10:44 IST)
ஜிம்பாப்வே அணியின் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி அந்நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது பொலிவை இழந்தது. கடந்த சில பத்தாண்டுகளாகவே உப்புக்கு சப்பாணி அணியாகவே இருந்து வந்த ஜிம்பாப்வே அணி இந்தாண்டு உலகக்கோப்பைக்கு  தகுதிப்பெறவில்லை.

இந்நிலையில் அந்நாட்டு அணியில் ஜிம்பாப்வே அரசின் தலையீடு அளவுக்கு அதிகமாக இருப்பதால் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு ஐசிசி காலம் குறிப்பிடாமல் தடை விதித்துள்ளது. இதனால் அந்நாட்டு வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இதுகுறித்து அந்த அணியின் சிக்கந்தர் ரஸா ‘ நாங்கள் தடை செய்யப்பட்டுள்ளோம் என்று தெரிகிறது, ஆனால் எத்தனை காலம் இது நீடிக்கும்?. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி நாங்கள் எங்கு செல்வது ?. கிரிக்கெட் பேக்கை எரித்து விட்டு வேறு வேலை தேட வேண்டியதுதானா? ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments