இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் A+, A, B, C என நான்கு பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தங்களை வழங்குகிறது. செயல்திறன் மற்றும் டெஸ்ட் வடிவத்தில் பங்கேற்பதை பொறுத்து இந்த ஒப்பந்த ஊதியம் மாறுபடும்.
தற்போது A+ பிரிவில் உள்ள ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, அடுத்த ஒப்பந்த சுழற்சியில் சம்பள குறைப்பை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அவர்கள் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் முழுமையாக செயல்படாத காரணத்தினால், அவர்கள் A பிரிவுக்கு பதவி இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A+ ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளமாக பெறும் இவர்கள், A பிரிவுக்கு மாறினால் ரூ.5 கோடி மட்டுமே பெறுவார்கள். இதன் மூலம், அவர்களுக்கு ரூ.2 கோடி வரை சம்பள குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்படும் கேப்டன் சுப்மன் கில் A+ பிரிவுக்கு உயர்த்தப்படலாம்.