Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

Siva
திங்கள், 31 மார்ச் 2025 (17:29 IST)
இலவச டிக்கெட் கேட்டு மிரட்டுவதாகவும், இந்த மிரட்டல் தொடர்ந்தால் ஐதராபாத் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம் என்றும் ஹைதராபாத் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஐபிஎல் சீசன் சமீபத்தில் தொடங்கி, விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அதிக அளவிலான இலவச டிக்கெட் கேட்டுக் கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
 
மேலும், இது குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்தால், ஹைதராபாத் மைதானத்தில் விளையாடாமல் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஆனால், இதனை மறுத்துள்ள ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து எந்தவிதமான கடிதமும் நிர்வாகத்திடம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments