பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியின் அபிஷேக் அபாரமாக விளையாடி சதமடித்தார்.
ஐபிஎல் போட்டியில் நேற்று ஹைதராபாத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் நேருக்கு நேராக விளையாடின.
பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அசத்தலான தொடக்கம் அளித்த பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் 66 ரன்களுக்குள் முதற் விக்கெட்டின் இழப்பை சந்தித்தனர். பின்பு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து ரன்களை குவிக்க தொடங்கினர். ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு வலுவான ஆதாரம் அளித்தார்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார், இதில் கடைசி ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை அடித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 245 ரன்களை எடுத்து, 6 விக்கெட்டுகளை இழந்தது.
ஹைதராபாத் அணி 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான தொடக்கம் அளித்தனர். அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் அடித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். அவர் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
18.3 ஓவர்களில் 247 ரன்களை எடுத்த ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி, ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச சேஸிங் எனும் சாதனையை உருவாக்கியது.