கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

Siva
வியாழன், 4 டிசம்பர் 2025 (08:14 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கொடுத்த இமாலய இலக்கை கடைசி ஓவரில் எட்டி தென்னாப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர்களின் அபார சதம் காரணமாக 358 ரன்கள் எடுத்தது.
 
இதனை எடுத்து 359 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாபிரிக்க அணி, 49.2 ஓவர்களில் 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் அபாரமாக விளையாடி 110 ரன்கள் அடித்தார்.
 
கடைசி நேரத்தில் ப்ரீட்ஸ் 34 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார் என்பதும், இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments