'சீதா ராமம்' படப்புகழ் நடிகை மிருணாள் தாக்கூர், சமீப காலமாக நடிகர் தனுஷ் மற்றும் கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவருடனும் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
மிருணாள் நடித்த திரைப்பட நிகழ்வுகளில் தனுஷ் கலந்துகொண்டதுடன், இன்ஸ்டாகிராமில் மிருணாள் கருத்து தெரிவிப்பதும் இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்தது. இதற்கிடையே, ஸ்ரேயஸ் ஐயருடனும் மிருணாள் நெருக்கமாக இருப்பதாக மற்றொரு வதந்தியும் கிளம்பியது.
இந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகை மிருணாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். தன் தாயுடன் சிரிக்கும் வீடியோவை பதிவிட்ட அவர், “அவர்கள் பேசுகிறார்கள், நாங்கள் சிரிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “வதந்திகள் எப்போதும் இலவச விளம்பரங்களே. எனக்கு அது பிடிக்கும்” என்றும் கூறியிருக்கிறார்.
இந்த பதிலின் மூலம், அவர் இந்த இருவரில் யாரையும் காதலிக்கவில்லை என்பதை குறிப்பதாகவும், ஆனால் வதந்திகளை ரசிப்பதாகவும் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.