Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

Advertiesment
சுப்மன் கில்

Siva

, ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (09:56 IST)
இந்திய கிரிக்கெட்டின் பழம்பெரும் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பை இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தவறவிட்டபோதிலும், அவருக்கு கிடைத்த ஒரு உணர்வுபூர்வமான அங்கீகாரம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 
 
சுனில் கவாஸ்கர், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். கில், இங்கிலாந்துக்கு எதிரான 'ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை' தொடரில், 10 இன்னிங்ஸ்களில் 754 ரன்கள் குவித்து, கவாஸ்கரின் 774 ரன்கள் என்ற சாதனையை முறியடிக்க 21 ரன்கள் வித்தியாசத்தில் கோட்டைவிட்டார்.
 
இதை கவனித்து வந்த கவாஸ்கர், ஆட்டத்தின் முடிவில் கில் அருகில் சென்று, தனிப்பட்ட முறையில் தனது கையெழுத்திட்ட தொப்பி மற்றும் சட்டையை அவருக்கு பரிசளித்தார். இந்திய கிரிக்கெட்டின் மிக மரியாதைக்குரிய வீரர்களில் ஒருவரிடமிருந்து இது போன்ற ஒரு செயல்பாடு மிகவும் அரிதானது.
 
கவாஸ்கர், "இந்தத் தொப்பியை நான் சில பேருக்கு மட்டும்தான் எனது கையெழுத்துடன் கொடுப்பேன்" என்று கில்லிடம் கூறினார். கில், கவாஸ்கரின் ரன் சாதனையை முறியடிக்க தவறியபோதிலும், மற்றொரு சாதனையை படைத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 1978/79-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கவாஸ்கர் அடித்த 732 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து, கில் 754 ரன்கள் அடித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?