நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில், பெங்களூரு அணி அபாரமாக வெற்றி பெற்று, 18 ஆண்டுகால கோப்பை கனவை நனவாக்கியது. ஆனால் அதே நேரத்தில், கடைசி ஓவரில் மிகவும் அருமையாக விளையாடிய பஞ்சாப் வீரர் ஷஷாங்க் சிங்-ஐ மீடியாக்களும் சரி, நேரலையை ஒளிபரப்ப்பிய கேமராவும் சரி, கண்டுகொள்ளாமல் விட்டது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில், பஞ்சாப் அணி கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் எதுவும் பெறாத ஷஷாங்க் சிங், அடுத்த நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை அடித்தார். இன்னும் ஒரே ஒரு சிக்ஸர் அவர் அடித்திருந்தால், போட்டியை வெற்றி நோக்கி கொண்டு சென்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேற்றைய போட்டியில், கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகள் மீதம் இருக்கும்போதே, ஒட்டுமொத்த மீடியாவும் விராட் கோலியை மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்தது. அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதது தான் திரைகளில் ஒளிபரப்பானது.
மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை அடித்து, வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்ற ஷஷாங்க் சிங் ஒட்டுமொத்தமாக கண்டு கொள்ளப்படாதது, மிகவும் பரிதாபகரமான ஒன்று என பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து, ஒட்டுமொத்த மீடியாவும் விராட் கோலிக்கே ஆதரவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடைசி மூன்று பந்துகளில் ஷஷாங்க் சிங் அடித்த பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை பஞ்சாப் அணியின் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.
அவருக்கு கண்டிப்பாக இந்திய அணியில் ஒரு இடம் தேவை எனும் கோரிக்கையும் எழுந்து வருகிறது.
Edited by Siva